Wednesday, October 1, 2014

ஊடல் ..



உன்
மெல்லிய தீண்டலின்
பின்னான தேவைகள்
தெரிந்திருந்தும்
ஏனோ
உறவுக்குள்
உள்வர முடியவில்லை ..

நெகிழ்ந்திருந்த
சேலையின் கொசுவத்தில்
உன் விருப்பத்தின்
விண்ணப்பங்கள்
படர்ந்த வண்ணம் ...

உன் மூச்சின் வெப்பம்
கழுத்தினை
சூடேற்றிய பொழுதும்
குளிர்ந்த நிலவின்
மௌனங்களின்
நீட்சியாகவே
இருக்கின்றது ...

அதன் தேவை
எதோ ஒன்றாகவே இருக்கிறது ..
தொட்டதும் அலரும்
மலர் ஒன்றின்
ஒதுக்கம்
உணர்ந்திருந்த பொழுதும்
உதிர மறுக்கும்
அந்த ஒரு சொல்லில்
கட்டுண்டு
அவிழ மறுக்கிறது மலர் ..

மௌன விரதத்தின்
நீட்சியில்
உன் மனிப்புகள்
விண்ணப்பிக்கப் பட்ட
மறுகணம்
அலர்ந்துவிடுகிறது
உன் மீதான மையல்கள் .

No comments:

Post a Comment